March 14, 2019 தண்டோரா குழு
தேர்தல் நடத்தை விதி அமல் படுத்தப்பட்டதால் கோவையில் தலைவர்களின் சிலைகள் துணி வைத்து மூடப்பட்டது
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு உள்ளதையடுத்து கோவையில் , ஜெயலலிதா, அண்ணா மற்றும் எம் ஜி ஆர் சிலைகள் துணிகள் வைத்து மூடப்பட்டது.தேர்தல் அறிவித்தது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு உள்ளதையடுத்து, கட்சி ரீதியான போஸ்டர்கள் , மற்றும் சிலைகளை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் மறைத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவையை அடுத்து அண்ணா சிலை சந்திப்பு பகுதி அருகே, அறிஞர் அண்ணாவின் சிலை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை, எம் ஜி ஆர் சிலை உள்ளது. இந்த சிலைகளை ஊழியர்கள் துணியை கொண்டு மறைத்து வைக்கும் பணியில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைவர்களின் சிலையும் மறைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.