August 20, 2019 தண்டோரா குழு
டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்தல் மற்றும் காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர்கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பணியிலிருந்து ஓய்வு பெற்றவருக்கு ஓய்வூதியமாக மாதம் 6 ஆயிரம் படங்கள் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணகிரி டாஸ்மாக் விற்பனையாளர் ராஜா படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனத்தை தெரிவித்தனர். மேலும், அவரது வாரிசுகளுக்கு உடனடியாக அரசு பணி வழங்கவும், சிறப்பு நிதியாக 25 லட்சம் ரூபாய் வழங்கவும் வலியுறுத்தினர்.