• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு

June 10, 2019 தண்டோரா குழு

கட்டாய இலவச கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாணவனை பள்ளியில் சேரத்து விட்டு தற்போது கட்டண வசூலில் ஈடுபட்டிருக்கும் தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் வளர்ப்புத்தாய் மனு அளித்தார்.

கோவை வீரபாண்டி பிரிவு பகுதியைச்சேரந்தவர் ஜெயா .கோவை மாவட்ட ஆட்சியரின் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு தனது சகோதரின் மகனுடன் வந்த இவர் மனு ஒன்றை அளித்தார்.அந்த மனுவில் தனது சகோதரன் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்து விடவே அவரது இரு மகன்களையும் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் சகோதரனின் மூத்த மகனான ஆன்ரோசனை(4) ல் கட்டாய கல்வி உரிமைசட்டத்தின் கீழ் அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் சேரத்தாகவும் அதன்படி யூ.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை இலவசகல்வி வழங்கப்படும் என அந்த பள்ளியின் அறிக்கையில் குறிப்பிடப்படிருந்தாகவும் கூறப்பட்டிருந்தது.இந்த ஆண்டு எல்.கே.ஜி வகுப்பில் தொடர பள்ளி நிர்வாகத்தினர் 30,000 ரூபாய் கேட்பதாகவும், இலவச கல்வி என்று கூறிவிட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைக்காக ஏற்கனவே பணம் செலுத்தி விட்ட நிலையில் தற்போது கல்வி கட்டணம் கேட்கப்பட்டுகிறது.

ஆகவே ஆன்ரோசனை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு அனுப்ப இயலாத சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும் இலவச கல்வி என்று கூறிவிட்டு தற்போது கட்டணம் வசூலிக்கும் அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்க