• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தனியார் கொரனா பரிசோதனை மையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

September 23, 2020 தண்டோரா குழு

கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் கொரனா பரிசோதனை மையத்தில் கொரானா இல்லாதவருக்கு கொரனா இருப்பதாக கூறி சான்றிதழ் வழங்கியதால் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கோவை அடுத்த வடவள்ளி பகுதியில் தனியார் நுண்கிருமி பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யபட்டு வருகிறது.
இந்நிலையில்,கோவை கோவில்மேட்டை சேர்ந்தவர் மணிகண்டன்( 27),நேற்று மேற்கண்ட தனியார் பரிசோதனை நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.இதில் மணிகண்டனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

மேலும் சந்தேகம் அடைந்த மணிகண்டன் கோவை அவினாசி சாலையில் உள்ள மற்றொரு தனியார் மையத்தில் பரிசோதனை மேற்கொண்டார்.அப்போது அதில் கொரோனோ பாதிப்பில்லை என சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த பரிசோதனை முடிவினால் மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டன் அவரது நண்பர்கள் மற்றும் உறவினருடன் பரிசோதனை நிலையத்தை முற்றுகையிட்டதுடன் பரிசோதனை முடிவு தொடர்பாக பரிசோதனை நிலைய ஊழியர்களிடம் கேட்டுள்ளார்.

அப்போது பரிசோதனை நிலைய ஊழியர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த வடவள்ளி காவல்துறையினர் பாதிக்கபட்டவரின் உறவினர் மற்றும் பரிசோதனை நிலைய நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் பரிசோதனை நிலையத்தை தற்காலிகமாக பூட்டினர்.மேலும் பரிசோதனை நிலைய ஊழியர்களிடம் விசாரனையில் ஈடுபட்டுள்ளனர். இதே பரிசோதனை நிலையத்தில் கடந்த 30ம் தேதி லிங்கனூரை சேர்ந்தவர் யஸ்வந்த்(26), மருதமலை லெப்ரசி காலனியை சேர்ந்தவர் சந்தோஷ்( 27) என்ற இருவரும் கொரனா பரிசோதனை மேற்கொண்டதில் இருவருக்கும் கொரோனோ தொற்று உறுதி எனவும் மற்றொரு பரிசோதனை நிலையத்தில் சோதனை மேற்கொண்டதில் கொரனா வைரஸ் தாக்கம் இல்லை என முடிவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க