• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட 22 இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு

May 13, 2020 தண்டோரா குழு

கோவை மாநகர பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட 22 இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு தடுப்புகள் அகற்றப்பட்டன.

கோவை மாநகர பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட 22 இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இதனால் அங்கிருந்து தடுப்புகள் அகற்றப்பட்டன. தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரானா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் பூரண குணமடைந்து 15 நாட்களுக்குள் மேல் ஆகிறது. அவர்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.இதனால் தனிமைப்படுத்தப்பட்ட 22 இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன போலீஸ் பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டது.இந்த பகுதியில் இருக்கும் கடைகள் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

கோவை மாநகராட்சியில் தனிமைப்படுத்தப்பட்ட 30 பகுதிகளில் கே.கே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு,போத்தனூர் ரயில்வே காலனி, சாய் நகர், திருமலை நகர், கருப்பராயன் கோவில் வீதி, சிட்கோ, கஸ்தூரி கார்டன் உள்ளிட்ட 28 இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.அந்த இடங்களை சேர்ந்தவர்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் செல்லலாம் ஆனால் காரணமின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வெங்கடாபுரம் பாபா வீதி கோவை கார்டன், பி கே புதூர் பி.ஆர்.எஸ் பகுதி சிறைச்சாலை, சாரமேடு ராயல் நகர் உள்பட தனிமைப்படுத்தப்பட்ட 8 இடங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என கோவை மாநகராட்சி சார்பில் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க