May 12, 2020 தண்டோரா குழு
கோவையில் இரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்ப வட மாநில தொழிலாளர்களை தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் அரசு பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர்.
கோவையில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் சிறப்பு இரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.இன்று மாலை கோவை இரயில் நிலையத்தில் இருந்து பீகார் மாநிலத்திற்கு சிறப்பு இரயில் கிளம்ப உள்ளது. இதற்காக சூலூர் பகுதியில் இருந்து வட மாநில தொழிலாளர்கள் அரசு பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர்.வருவாய் துறை சார்பில் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசு பேருந்துகளில் தனி மனித இடைவெளி இன்றி, தொழிலாளர்கள் நெருக்கமாக அமர வைக்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர். அரசு துறை ஏற்பாடு செய்த பேருந்திலேயே தனி மனித இடைவெளி பின்பற்றாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.