June 4, 2025
தண்டோரா குழு
உலகளவில் முன்னணி ஆட்டோமோட்டிவ் வழங்கல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் என புகழ் பெற்றிருக்கும் ZF குழுமம், கட்டுமானம் மற்றும் இரயில்வே துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாநகரில் அதன்உற்பத்தி ஆலையை தொடங்கி இருப்பதன் மூலம் இந்தியாவின் துரிதமான வளர்ச்சி மீதான அதன் அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு முக்கியமான முன்னேற்ற நடவடிக்கையை எடுத்திருக்கிறது.
10,000 சதுர மீட்டர்கள் என்ற மிகப்பெரிய பரப்பளவில் நிறுவப்பட்டிருக்கும் இந்த புதிய உற்பத்தி தொழிலகமானது, ZF குழுமத்தின் மிக நவீன உற்பத்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.‘இந்தியாவிற்காகவும் மற்றும் உலகத்திற்காகவும் இந்தியாவில்தயாரிப்பது’ என்ற ZF – ன் குறிக்கோளை செயல்படுத்தும் வகையில் இந்த புதிய கட்டுமான சாதனங்கள் தயாரிப்பு ஆலை நிறுவப்பட்டிருக்கிறது.
உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே நேரத்தில் உள்நாட்டளவில் உற்பத்தி செயல்பாட்டில்நேர்த்தி என்ற இலக்கை நோக்கிய இந்நிறுவனத்தின் சிறப்பு கவனத்தை இந்த அணுகுமுறை முன்னிலைப்படுத்துகிறது. இந்தியாவில் உள்நாட்டு சந்தைகளுக்கு கட்டுமான சாதனங்கள் பிரிவு மற்றும் இரயில்வேக்கு புதுமையான தீர்வுகளைமுன்னோடித்துவமாக வழங்குவதில் இந்த ஆலை ஒரு மிக முக்கியப் பங்காற்றும். அதே நேரத்தில், ZF குழுமத்தின் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு உற்பத்திக்கான மையமாக செயல்பட்டு ஏற்றுமதி களையும் அதிகரிக்கும்.
இந்தியாவின் வலுவான கட்டுமான சாதன பிரிவில் காணப்பட்டு வரும் வளர்ச்சியை எதிர்கொள்ளவும், உயர்தர, புதுமையான தீர்வுகளுக்காக தனது வாடிக்கையாளர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை பூர்த்தி செய்யவும் 20 மில்லியன் யூரோ (192 கோடிகள்) என்ற தொகையை ZF குழுமம் இந்தியாவில் முதலீடு செய்திருக்கிறது. இந்தியாவின் வளர்ந்து வரும் போக்குவரத்து (மொபிலிட்டி) துறைக்கு உலகத்தரத்திலான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உள்நாட்டிலேயே சிறந்த தயாரிப்புகளையும், தீர்வுகளையும் வழங்குவதில் தனது தளர்வில்லாத பொறுப்புறுதியை மேலும் வலுப்படுத்துவதே இந்த முதலீட்டின் நோக்கமாகும்.
ZF குழுமத்தின் நிர்வாக குழுவின் உறுப்பினரும் மற்றும் வர்த்தக வாகன தீர்வுகள் மற்றும் தொழிலக தொழில்நுட்பத் துறையின் தலைவருமான டாக்டர். பீட்டர் லயர் கூறியதாவது:
“கோயம்புத்தூரில் ZF – ன் புதிய உற்பத்தி ஆலையை பெருமிதத்துடன்நாங்கள் தொடங்கியிருக்கிறோம்.இந்தியாவின் துடிப்பான உற்பத்தி சூலமைப்பின் மீது ZF குழுமம் கொண்டிருக்கும் பொறுப்புறுதியை செயல்படுத்துவதில் இது மற்றுமொரு முக்கியமான நடவடிக்கையாகும்.ZF குழுமத்திற்கு ஒரு மிக முக்கிய சந்தையாகஇந்தியா இருக்கிறது.இதன் பொறியியல் மற்றும் உற்பத்தி திறன்களுக்காக இந்தியாவின் மீது நாங்கள் கூர்நோக்கம் செலுத்தி வருகிறோம். இந்தியாவின் வளர்ந்து வரும் உள்நாட்டு சந்தையால் இது முன்னெடுக்கப்படுகிறது. எமதுவாடிக்கையாளர்களுக்கு நெருக்கமான அமைவிடங்களில் வளர்ச்சிக்கான எமது உலகளாவிய உத்தியை செயல்படுத்துவதாக இந்த மிக நவீன உற்பத்தி ஆலை நிறுவப்பட்டிருக்கிறது.இந்த முக்கியமான சந்தையில் புத்தாக்கத்தையும், வளர்ச்சியையும்உத்வேகத்தோடு முன்னெடுத்துச் செல்வதில் ZF – ன் அர்ப்பணிப்பிற்கு இது எடுத்துக்காட்டாக திகழ்கிறது.” என்றார்.
இந்த முக்கியமான நடவடிக்கை குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தி ZF குரூப் இந்தியா – ன் பிரசிடென்ட் ஆகாஷ் பாஸே கூறியதாவது:
“இந்நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் மீது ZF – ன் தளராத பொறுப்புறுதியை பிரதிபலிக்கும்வகையில் மிக முக்கியமான உற்பத்தி மையமாக இந்தியா திகழ்கிறது.‘இந்தியாவிற்காகவும், உலகிற்காகவும் இந்தியாவில் தயாரிப்பது’ என்ற எமது கொள்கை முடிவும், உத்தியும் உள்நாட்டில் நிலவும் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகளை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது; அதே நேரத்தில், உற்பத்திக்கான செயல்நேர்த்தியில் உலகளவில் முதன்மை நாடாகவும் இந்தியாவை இது நிலைநிறுத்துகிறது.இந்தியாவின் செயல்திறனை சிறப்பாக பயன்படுத்துவதன் வழியாக புத்தாக்கத்தையும், பொருளாதாரமுன்னேற்றத்தையும் உத்வேகத்தோடு முன்னெடுப்பது எமது நோக்கமாகும்; இந்திய சந்தையின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அதே நேரத்தில் உலகளவில் தர அளவுகோல்களை எமது தயாரிப்புகள் நிறுவுவதை நாங்கள் உறுதி செய்கிறோம்.” என்றார்.
ZF குழுமத்தின் தொழிலக தொழில்நுட்பங்களுக்கான செயலாக்க துணைத்தலைவர் ஆண்ட்ரீயாஸ் மோசெர் பேசுகையில்,
“அதிவேகமான நகரமயமாக்கலுடன் இந்நாடு கண்டு வருகின்ற உட்கட்டமைப்பு சார்ந்த இணைப்பு வசதி மீதானவலியுறுத்தலுடன் சந்தையின் சாத்தியத்திறன் குறித்து கட்டுமான தொழில்துறையானது, நேர்மறையான நம்பிக்கையையும், உத்வேகத்தையும் கொண்டிருக்கிறது, கோயம்புத்தூர் மாநகரில் எர்கோபவர் டிரான்ஸ்மிஷன் மற்றும் மல்ட்டிடிராக் ஆக்ஸில் சீரிஸ் – ன் தயாரிப்பானது இந்த முன்னேற்றத்திற்கு நல்ல பங்களிப்பை வழங்கும். உள்நாட்டுத் தேவைகள் மற்றும் ஏற்றுமதி தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு இத்தொழிலகத்திற்கு இது உதவும். கோயம்புத்தூரில் நிறுவப்பட்டிருக்கும் இந்த புதியஆலையோடு ஜெர்மனியில் இயங்கி வரும் பிரதான உற்பத்தி மையமானது, உலகளாவிய கட்டுமான சாதன சந்தையில் எதிர்கால சந்தை வளர்ச்சியின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தேவைப்படும் உற்பத்தி திறனுக்கு ஆதரவளிக்கும்.” என்று கூறினார்.
கட்டுமானம், விவசாயம் மற்றும் சுரங்கம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கான சாதனங்களை தயாரிக்கும் இந்த கட்டுமான சாதனங்கள் தயாரிப்பு ஆலை, உள்நாட்டைச் சேர்ந்த மற்றும் சர்வதேச OEM நிறுவனங்களுக்கு உலக தரத்திலான தொழில்நுட்பதயாரிப்புகளை வழங்கி, இந்தியாவில் ZF குழுமத்தின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும். அதிகரித்து வரும் கட்டுமான பிரிவுக்கும் மற்றும் OEM நிறுவனங்களது தேவைகளுக்கு ஆதரவளிக்கவும் எர்கோபவர் M டிரான்ஸ்மிஷனானது இந்த ஆலையில்தயாரிக்கப்படும்.
இந்த தானியக்க பவர் ஷிஃப்ட் டிரான்ஸ்மிஷனானது, அனைத்து வகையான கட்டுமான இயந்திர பயன்பாடுகளுக்கும் உகந்தவாறு உருவாக்கப்பட்டிருக்கிறது; இதன் செயல்திறன் மற்றும் தரத்திற்காக சந்தையில் ஒரு தரஅளவுகோலை நிறுவியிருக்கும் தயாரிப்பாக இது கருதப்படுகிறது.பல்வேறு அம்சங்களுடன் விருப்பத்தேர்வின் கீழ் வழங்கப்படும் திறன் தொகுப்புடன் கூடிய இந்த டிரான்ஸ்மிஷன், உற்பத்தி திறனை அதிகரிக்கும் மற்றும் 15% வரை எரிபொருள் சேமிப்பை வழங்கும்.
கோயம்புத்தூர் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்ஸில்கள், மல்ட்டிராக் சீரிஸ் – ன் அங்கமாக இருக்கின்றன.கட்டுமான இயந்திரங்களின் கனரகப் பணியில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாத விதத்தில் இந்த ஆக்ஸில்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.அதிக வலிமை மற்றும் முறுக்குவிசை திறன் இதில் இருக்கின்ற போதிலும்,இந்த ஆக்ஸில் கச்சிதமான அளவில் மெல்லிய எடை கொண்டதாக இருக்கிறது.மாடுலர் ஆக்ஸில் புராடக்ட் அணிவரிசைக்கு பல்வேறு விகிதங்கள் மற்றும் எண்ணற்ற டிரேடுமற்றும் டிஃபரன்ஷியல் லாக் விருப்பத்தேர்வுகள் வழங்கப்படுகின்றன.சக்கர வேக ஈரமான மல்ட்டி டிஸ்க் பிரேக்குகளைப் பயன்படுத்துவது, பிரேக்கிங் இழப்புகளை குறைப்பதால், செயல்திறனானது, மேம்படுத்தப்படுகிறது.
கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய உற்பத்தி ஆலையில், இந்திய இரயில்வே சந்தைக்காக தனது எக்கோமெட் டிரான்ஸ்மிஷன் உற்பத்தியையும் ZF மேற்கொள்ளும். எக்கோமெட் டிரான்ஸ்மிஷன் மூலம், மெட்ரோ கியர்பாக்ஸ்களின்செயல்திறன், நெகிழ்வுத்தன்மை மற்றும் குறைவான செலவு ஆகியவற்றில் புதிய தரநிலைகளை ZF நிறுவியிருக்கிறது.இதன் மாட்யூலர் வடிவமைப்பின் காரணமாக, வாடிக்கையாளரது தேவைகளைச் சார்ந்து மெட்ரோவின் விரிவான பல்வேறுவகையினங்களுக்கு இந்த கியர்பாக்ஸ் பொருத்தமானதாக இருக்கும். இது இல்லையெனில், கூடுதல் உருவாக்கல் மற்றும் உற்பத்தி செலவுகள் ஏற்படும். 100 ஆண்டுகளுக்கும் அதிகமாக இரயில்வே தொழில்நுட்பத்தை வழங்கும் நிறுவனமாக தனதுநிலையை ZF விரிவாக்கி வந்திருக்கிறது.
இன்றைக்கு டிரைவ்லைன் மற்றும் சேசிஸ் தீர்வுகள் உட்பட, பிரமிக்கச் செய்யும் ஒரு விரிவான தொகுப்பை இது கொண்டிருக்கிறது.அத்துடன், connect@rail என்ற முழுமையான டிஜிட்டல் சேவைத் தொகுப்பையும்இது வழங்குகிறது. ஐரோப்பா, வடஅமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இரயில்வே சந்தைகளில் வலுவான செயலிருப்பை நிலைநிறுத்தியதற்குப் பிறகு ‘உள்நாட்டிற்காக உள்நாட்டிலேயே’ என்ற ZF – ன் உத்தியில் அடுத்த அடுத்த நடவடிக்கையாக இந்தியாவிலேயே இவற்றை தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
உலக தரத்திலான உற்பத்தி அமைவிடத்தை உருவாக்குவதில் ZF குழுமம் செய்திருக்கும் முதலீடானது, வளர்ச்சி அடைந்து வரும் சந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தும் ZF – ன் கோட்பாட்டை பிரதிபலிக்கிறது. வாடிக்கையாளர்களோடு சேர்ந்துவளர்வது என்ற அதன் கொள்கைக்கு நல்ல எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது.
உள்ளூர் தேவைகளோடு உலகளாவிய தேவைப்பாடுகளையும் பூர்த்திசெய்வதற்கு உதவும் இந்த புதிய ஆலை, உள்நாட்டிலேயே தயாரிப்பு பணிகளை மேற்கொள்வதில் ஒருமுக்கியப் பங்காற்றும். வாடிக்கையாளர்களுக்கு அருகே உற்பத்தி ஆலைகளை நிறுவுவது என்ற ZF – ன் அணுகுமுறையும் இதன் மூலம் வெளிப்படுகிறது.