• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தந்தை பைக் வாங்கி தராததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

June 6, 2020 தண்டோரா குழு

கோவையில் இருசக்கர வாகனம் வாங்கி தர தந்தை மறுத்ததால் மகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சோமையனூர் பிருந்தாவன் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மூத்த மகன் வசந்தகுமார்(25) சரவணம்பட்டி கீரணத்தம் பகுதியில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது தந்தையிடம் வெகு நாட்களாக புதிய இரு சக்கர வாகனம் ஒன்று வாங்கி தர சொல்லி வலியுறுத்து உள்ளார்.

இந்நிலையில் கடந்த 4ம் தேதி மீண்டும் தன் தந்தையிடம் இருசக்கர வாகனம் வாங்கி தர சொன்னபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, செல்வராஜ் அவரது மனைவி மற்றும் இளைய மகனுடன் தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இரவு 9.30 மணியளவில் வீடு திரும்பிய போது, வசந்தகுமார் அவரது அறையில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டதை அறிந்த பெற்றோர் கதறி அழுதனர்.

இதனையடுத்து, செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த தடாகம் போலீசார், வசந்தகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.தந்தை இரு சக்கர வாகனம் வாங்கி தர மறுத்ததால் இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க