• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தண்ணீர் வாளியில் விழுந்து 9மாத குழந்தை பலி

September 16, 2020 தண்டோரா குழு

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள சிவராஜ் கார்டன் என்ற பகுதியில் வசித்து வருபவர் அபுல் உசேன் (25) . இவர் அசாம் மாநிலம் ரூபாகி மாவட்டம் பகுதியிலிருந்து தன் குடும்பத்துடன் வந்து வேலை செய்து வருகிறார். இவருக்கு தர்ஷினி என்ற மனைவியும் மூன்று வயதில் பெண் குழந்தையும், சகோலம் என்ற‌ 9 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். நேற்று இரவு கணவன் மனைவி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

அதிகாலை எழுந்த கணவன் அபுல் உசேன் வேலைக்காக சென்றுள்ளார்.வீட்டில் இருந்த மனைவி தூங்கி கொண்டிருந்த நேரத்தில் 9மாத குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.‌ அப்போது அருகில் பாத்திரம் கழுவ தண்ணீர் நிரப்பிய வாளியில் குழந்தை தவறி விழுந்தது. தூக்கத்திலிருந்து எழுந்து தாய் பல இடங்களில் குழந்தையை தேடி உள்ளார்.அப்போது மயங்கிய நிலையில் குழந்தை தலைகுப்புற கிடப்பதைக் கண்டு என் கணவருக்கு தகவல் சொல்லி குழந்தையை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை இறந்து விட்டது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து கொண்டான் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க