• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தண்ணீர் தேடி அலையும் யானை கூட்டங்கள்

April 3, 2019 தண்டோரா குழு

கோவை அருகே வனப்பகுதியில் நிலவும் வறட்சியினால் தண்ணீர் தேடி யானைகள் கூட்டங் கூட்டமாக அலைந்து வருகின்றன.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் இரவு நேரங்களில் அதிகளவில் வருவது வழக்கம். தற்போது வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் தண்ணீர் வனவிலங்குகளுக்கு கிடைப்பதில்லை. இதனால் யானைகள் தண்ணீருக்காக கிராமங்களுக்கு வருவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை ஆனைக்கட்டி பகுதியில் தாகம் தீர்க்க தண்ணீர் தேடி யானைகள் கூட்டங்கூட்டமாக வந்துள்ளன. குட்டி உள்ளிட்ட 9 யானைகள் கூட்டமாக கங்கா சேம்பர் என்ற இடத்திற்கு வந்து, அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீரை குடித்து சென்றன. இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் எடுத்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பாததே யானைகள் வருவதற்கு காரணமெனவும், போதியளவு தண்ணீரை தொட்டிகளில் நிரப்ப வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க