• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தடை செய்யப்பட்ட 140கிலோ மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்

December 31, 2019

கோவையில் தடை செய்யப்பட்ட 140கிலோ மதிப்புள்ள குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழக அரசால் அன்மையில் குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பதற்கு தடை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைகள் மற்றும் குடோன்களில் சோதனை நடத்தி பறிமுதல் செய்து வருகின்றனர். இதே போல் இன்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு கோவை புளியகுளம் பகுதியில் குட்கா போதை பொருளை வைத்து விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் வந்துள்ளது.

இதனையடுத்து அங்கு விரைந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் கொண்ட குழுவினர் புளியகுளம் பகுதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த 140கிலோ மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.மேலும் குட்கா வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளரிடம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க