• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி

October 19, 2017 தண்டோரா குழு

கோவையில் டெங்கு காய்ச்சல் காரணமாக அன்னூரை சேர்ந்த 6 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அன்னூர் அடுத்த செல்லனூர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரது 6 வயது மகள் விஸ்மிதா. இவர் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற சிறுமி கோவை அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களில் கோவை மாவட்டம் முழுவதும் 49 பேர் உயிரிழந்துள்ளதும் தற்போது கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு 142 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில் அதில் 41 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் 49 பேர் டெங்குவால் உயிரிழந்த நிலையில் உள்ளாட்சி மற்றும் நகராட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி டெங்கு பாதிப்பால் கோவையில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க