• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஜவுளி கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் – காவல் ஆணையரிடம் மனு

December 25, 2018 தண்டோரா குழு

கோவையில் ஜவுளி கடை நடத்தி வந்தவரிடம் கொலை மிரட்டல் விடுவதாக கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

கோவையை அடுத்த ஈச்சனாரி பகுதியை சேர்ந்தவர் பொன்னம்மாள். இவர் சுந்தராபுரம் பகுதியில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வந்த நிலையில் இந்த தொழிலானது மிகவும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜவுளி விற்பனையில் ஏஜெண்டாக பணிபுரியும் சரவணன் என்பவர் பொன்னம்மாளின் வீட்டை விற்று கொடுத்து கடன்களை அடைத்து தருவதாக கூறி ரூபாய் 10 லட்சத்திற்கு மேல் ஏமாற்றியுள்ளார்.

இந்த பணத்தை பொன்னம்மாள் கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசி சரவணன் கொலை மிரட்டல் விடுவதாக கூறி தமிழ்நாடு விஸ்வ பிரம்மா நிறுவன தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் கோவை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் தனக்கு பாதுகாப்பும் மற்றும் பணத்தை மீட்டு தர கோரியும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மனு அளித்தனர்.

மேலும் படிக்க