• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வரும் வடமாநிலத் தொழிலாளர்கள்

May 16, 2020 தண்டோரா குழு

கொரோனா தாக்குதல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், வருவாய் இழந்துள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முயற்சித்து வருகின்றனர்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மீண்டும் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்த சிறப்பு ரயில்களில் பயணிப்பதற்கான அனுமதிச் சீட்டு பெற தொழிலாளர்கள் பலர் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மாவட்ட நிர்வாகத்தினரிடமும் விண்ணப்பம் அளித்து வருகின்றனர். விண்ணப்பம் அளித்து பல நாட்கள் காத்திருந்தாலும் பயணச்சீட்டு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பாதிப்பால் வருவாய் இழந்துள்ள நிலையில், வேலை செய்து வந்த நிறுவனத்தின் உரிமையாளர்களும் உதவி செய்யாததால் ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள சாலைகளிலும், நடைபாதைகளிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் தஞ்சமடைந்து வருகின்றனர்.

மேலும் படிக்க