• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் செய்தியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

April 21, 2020 தண்டோரா குழு

கோவையில் களத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

கொரனா வைரஸை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வைரஸை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் ஆங்காங்கே நடக்கும் பல்வேறு நடைமுறைகளை பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி துறையினர் செய்தி சேகரித்து வெளியிட்டு வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து களத்தில் பணியாற்றிய பத்திரிகையாளர்களுக் நேற்றைய தினம் சென்னையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இதேபோல் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ராசாமணி உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ குழுவினர் 100க்கும் மேற்பட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கு தனித்தனியாக ரேபிட் டெஸ்ட் மூலம் பரிசோதனை நடைபெற்று வருகிறது.இதன் முடிவுகள் இன்று மாலைக்குள் குறுஞ்செய்தியாக வெளியிடப்படும்.

மேலும் படிக்க