• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் செயல்படும் மத்திய அரசின் அச்சகத்தை மூட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

February 2, 2018 தண்டோரா குழு

கோவையில் செயல்படும் மத்திய அரசின் அச்சகத்தை மூட இடைக்காலத் தடைவிதித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

நாட்டில் உள்ள 15 அச்சகங்களை ஒன்றாக இணைத்து 5 அச்சகங்களாக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. இதனையடுத்து கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் 134 ஏக்கரில் செயல்படும் அச்சகம் மூடப்பட்டு, 65 ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து மத்திய தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.ஆனால், தீர்ப்பாயம் தடை விதிக்க மறுத்ததை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஊழியர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இதனையடுத்து, இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கோவையில் உள்ள மத்திய அரசின் அச்சகத்தை மூட இடைக்கால தடை விதித்ததுடன், ஊழியர்களை இடமாற்றம் செய்யவும் தடை விதித்து விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தது.

மேலும் படிக்க