December 9, 2020 தண்டோரா குழு
கோவையில் செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான செட்டிநாடு பில்டர்ஸ் அலுவலகத்தில்
வருமான வரித்துறையினர் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை,ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் இன்று காலை 8 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரிஏய்ப்பு புகாரின்பேரில் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயல்பட்டுவரும் செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான செட்டிநாடு பில்டர்ஸ் அலுவலகத்திலும் இன்று காலை 8 மணி முதல் 15 அதிகாரிகள் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வரும் நிலையில் ஆவணங்கள் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த தகவல்கள் எதுவும் வருமான வரித்துறையினர் தரப்பில் வெளியிடப்படவில்லை.