October 28, 2019 தண்டோரா குழு
திருச்சியில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தையை உயிருடன் மீட்க சிறப்பு பிரார்த்தனை கோவையில் பள்ளிவாசலில் நடைபெற்று வருகிறது.
திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜிதை உயிருடன் மீட்க சிறப்பு பிரார்த்தனை தமிழகம் முழுவதும்
நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக கோயமுத்தூர் அத்தர் ஜமாத் பள்ளிவாசலில் இன்று மதியம் ஒரு மணி அளவில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
மேலும் இதனை தொடர்ந்து இன்று மாலை கோவை உக்கடம் பகுதியில் உள்ள கே.எம் ஜே.அனாதை இல்லத்தில் உள்ள 50″க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் சிறுவனை மிட்டு எடுக்க சிறப்பு தொழுகைசெய்தாா்கள். இச் சிறப்பு பிராத்தனை வழிபாடுகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகைக்குப் பிறகு இந்தக் குழந்தைக்காக இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்தார்கள்.