• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சுத்திகரிப்பு நிலையத்தின் இரும்பு கேட்டுகளை உடைத்த ஒற்றை யானை

May 28, 2020 தண்டோரா குழு

சிறுவாணி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் இரும்பு கேட்டை உடைத்து உள்ளே சென்ற ஒற்றை காட்டு யானையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அடுத்த சாடிவயல் வனப்பகுதியில் சிறுவாணி அணைக்குச் செல்லும் சாலையில் சிறுவாணி நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் அங்கு அடிக்கடி வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படும், வழக்கமாக ஒற்றை காட்டு யானை சுத்திகரிப்பு நிலையத்தை கடந்து செல்லும்.

இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் அங்கு வந்த ஒற்றை காட்டு யானை சுத்திகரிப்பு நிலையத்தில் இரும்பு கேட்டுகளை உடைத்து உள்ளே சென்றது. வெளியே ஊழியர்கள் யாரும் இல்லாததால் நீண்ட நேரம் அதே வளாகத்தில் நின்ற யானை பின் வனத்திற்குள் சென்றது.

மேலும் படிக்க