• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சுத்திகரிப்பு நிலையத்தின் இரும்பு கேட்டுகளை உடைத்த ஒற்றை யானை

May 28, 2020 தண்டோரா குழு

சிறுவாணி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் இரும்பு கேட்டை உடைத்து உள்ளே சென்ற ஒற்றை காட்டு யானையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அடுத்த சாடிவயல் வனப்பகுதியில் சிறுவாணி அணைக்குச் செல்லும் சாலையில் சிறுவாணி நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் அங்கு அடிக்கடி வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படும், வழக்கமாக ஒற்றை காட்டு யானை சுத்திகரிப்பு நிலையத்தை கடந்து செல்லும்.

இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் அங்கு வந்த ஒற்றை காட்டு யானை சுத்திகரிப்பு நிலையத்தில் இரும்பு கேட்டுகளை உடைத்து உள்ளே சென்றது. வெளியே ஊழியர்கள் யாரும் இல்லாததால் நீண்ட நேரம் அதே வளாகத்தில் நின்ற யானை பின் வனத்திற்குள் சென்றது.

மேலும் படிக்க