• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சுத்திகரிப்பு நிலையத்தின் இரும்பு கேட்டுகளை உடைத்த ஒற்றை யானை

May 28, 2020 தண்டோரா குழு

சிறுவாணி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் இரும்பு கேட்டை உடைத்து உள்ளே சென்ற ஒற்றை காட்டு யானையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அடுத்த சாடிவயல் வனப்பகுதியில் சிறுவாணி அணைக்குச் செல்லும் சாலையில் சிறுவாணி நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் அங்கு அடிக்கடி வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படும், வழக்கமாக ஒற்றை காட்டு யானை சுத்திகரிப்பு நிலையத்தை கடந்து செல்லும்.

இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் அங்கு வந்த ஒற்றை காட்டு யானை சுத்திகரிப்பு நிலையத்தில் இரும்பு கேட்டுகளை உடைத்து உள்ளே சென்றது. வெளியே ஊழியர்கள் யாரும் இல்லாததால் நீண்ட நேரம் அதே வளாகத்தில் நின்ற யானை பின் வனத்திற்குள் சென்றது.

மேலும் படிக்க