• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சில்லறை தகராறில் கொதிக்கும் எண்ணெயை வாடிக்கையாளர்கள் மீது ஊற்றிய பானிபூரி கடைக்காரர்

November 27, 2017 தண்டோரா குழு

கோவையில் சில்லறை தகராறில் கொதிக்கும் எண்ணெயை வாடிக்கையாளர்கள் மீது பானிபூரி கடைக்காரர் ஊற்றி உள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் மதியழகன் நகரை சேர்ந்தவகள் தீபக், திலீப், டேவிட், சேவியர். இவர்கள் நால்வரும் நேற்று இரவு அதே பகுதியில் சாலையோரத்தில் உள்ள பானி பூரி கடைக்கு சென்றுள்ளனர். அங்கு பானி பூரி சாப்பிட்டு பணம் கொடுத்துள்ளனர். அப்போது கடைக்காரருக்கும் அவர்களுக்கு சில்லறை தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், கடும்கோபமடைந்த தள்ளுவண்டி கடைக்கார் கணேசன் இளைஞர்கள் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார். இதனால் இளைஞர்கள் அலறியுள்ளனர். இதையடுத்து, அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சூலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் ஒரு ஹோட்டலில் இதேபோன்று வாடிக்கையாளர்கள் மீது கொதிக்கும் எண்ணையை கொட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க