• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சிறு குறு, நிறுவனங்களின் தொழிற்கடன் பற்றிய கலந்தாய்வு கூட்டம்

June 19, 2020 தண்டோரா குழு

கோவையில் சிறு குறு, நிறுவனங்களின் தொழில் வளர்ச்சி, மற்றும் தொழிற்கடன் பற்றிய கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில், பல்வேறு காரணங்களால் சிறு குறு,தொழிற்சாலைகள் மீண்டும் இயங்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில், மாவட்ட ஆட்சியர் இராசாமணி,மாநகராட்சி ஆணையாளர் ஷர்வணகுமார் ஜடாவத், மற்றும் அரசு அதிகாரிகள், துறை பிரிவு அலுவலர்கள், மற்றும் வங்கிமேலாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் வாயிலாக, சிறு குறு அமைப்பினரின் பல கேள்விகளுக்கு தீர்வுகள் பெறும் வகையில் அனைத்து அதிகாரிகளும் கலந்தாலோசனை நடத்தினர். இதில் சிறு குறு நிறுவனங்கள் மீண்டும் இயக்க, தொழிலாளர்கள் பற்றாக்குறை, மற்றும் மின்சாரதுறையின் மின் கட்டனம் மற்றும் வங்கி கடன் வழங்குவது தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை, அதிகாரிகளின் முன்னிலையில் சிறு, குறு அமைப்பினர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க