• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த முதியவர் கைது

June 24, 2020 தண்டோரா குழு

கோவை போத்தனூர் அருகே *எனக்கு உன்னை பிடித்திருக்கிறது உனக்கு ஓகே வா* என்று சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த வயதான நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை அடுத்த போத்தனூர் அருகே பஜன கோயில் தெருவில் வசிப்பவன் முகமது பீர் பாஷா வயது 66 ஆகும்.இதே பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வந்துள்ளான். உடனே அந்த சிறுமியிடம் *எனக்கு உன்னை பிடித்திருக்கிறது உனக்கு ஓகே வா* என்று கேட்டு கடிதம் ஒன்றை கொடுத்துள்ளான். இதனை அச்சிறுமி அவரின் தாயாரிடம் கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பந்தபட்ட நபரின் குடும்பத்தாரிடம் அச்சிறுமியின் வீட்டார் தெரிவித்தபோது அந்த முதியவரை கண்டித்துள்ளனர்.ஆனால் அதனை பொருட்படுத்தாத வயதானவன் மீண்டும் அந்த சிறுமியை மிரட்டி உள்ளான். இதனைத்தொடர்ந்து பயந்த சிறுமி வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரை விசாரித்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முதியவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் படிக்க