• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை – பாஜகவினர் புகார்

May 2, 2019 தண்டோரா குழு

கோவையில் உள்ள சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை என குற்றம்சாட்டி பா.ஜ.கவினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து கொடுக்கப்பட்ட மனுவில்,

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் அனைத்து சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் அரசு அறிவித்த இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை எனவும், இது தொடர்பாக பல முறை புகார் அளித்தும் ஆதி திராவிடர் நலத்துறை சார்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எனவே இடஒதுகீட்டை முறையாக சிறுபான்மையின பள்ளிகள் முறையாக பின்பற்றுகிறதா என மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும் எனவும், இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பா.ஜ.கவினர் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க