• Download mobile app
19 Dec 2025, FridayEdition - 3600
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சிறப்பு காவல்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை!

July 23, 2018 தண்டோரா குழு

கோவையில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை நான்காம் அணியில் எழுத்தராக பணியாற்றும் அமர்நாத் என்ற காவலர் முகாம் வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கோவைபுதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4-ம் அணியில் உள்ள கம்பெனியில் எழுத்தராக பணியாற்றி வருபவர் அமர்நாத்.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அவர் கடந்த 2016ம் ஆண்டு காவல் துறை பணியில் சேர்ந்துள்ளார்.அமர்நாத் கடந்த சில தினங்களாகவே மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில்,நேற்று அமர்நாத் இரவு பத்து மணி வரை பணியில் இருந்த நிலையில் இன்று காலை,அவர் முகாம் வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு சடலமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அமர்நாத்தின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதற்கிடையில்,அமர்நாத் காதல் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க