• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சிறந்த மாணவர்களுக்கான புரட்சியாளர் விருது !

August 31, 2019 தண்டோரா குழு

அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு, இலக்கியம், தலைமை பண்பு, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த மாணவர்களுக்கான புரட்சியாளர் விருதுகளை அமைச்சர் வேலுமணி கோவையில் வழங்கினார்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களான யூ ஆர் லவுட் (You are Loved) மற்றும் அம்மா கல்வியகம் கோவையில் உள்ள கே.பி.ஆர்.
கல்லூரியுடன் இணைந்து, ‘புரட்சியாளர் விருது’கள் வழங்கும் விழா கே.பி.ஆர்.கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து 4வது ஆண்டாக நடைபெறும் இதில் தமிழகத்தின் மதுரை,சென்னை,திருச்சி உட்பட 33 வருவாய் மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளியில் பயிலும் தகுதி வாய்ந்த 67 மாணவர்களையும், 33 ஆசிரியர்களையும் தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக இந்த விருதுக்கான மாணவர்களும், ஆசிரியர்களும் 7 வெவ்வேறு பிரிவுகளில் அதாவது, அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு, இலக்கியம், தலைமை பண்பு, சமூகப் பணி, விளையாட்டு, மாற்றுத் திறனாளி மற்றும் இசை போன்ற பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது.

விழாவில் விருதுகள் வழங்கி பேசிய தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி,

இதுபோன்ற விருதுகளும், அங்கீகாரமும், அரசுப் பள்ளி மாணவர்களை மேலும் தன்னம்பிக்கை கொள்ளச் செய்வதுடன், குறிப்பாக, கிராப்புற ஏழை மாணவர்களையும் பொருளாதாரத்திலும், சமூகப் பின்னணியிலும் அடித்தட்டில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களையும் நம்பிக்கை கொள்ளச் செய்து, அவர்களிடையே ஒரு சாதகமான,நம்பிக்கை மனநிலையை உண்டாக்க இந்த விருதுகள் உதவும் எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க