• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சித்த மருத்துவரின் தவறான சிகிச்சையால் கல்லூரி மாணவி உயிரிழப்பு – உறவினர்கள் போராட்டம்

June 17, 2019 தண்டோரா குழு

குருநாதன் என்று சித்த மருத்துவர் தவறான சிகிச்சை அளித்ததால் இளம்பெண் இறந்ததாக கூறி அந்த சித்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி அரசு மருத்துவமனை முன்பாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவைபுதூர் நேதாஜி நகரை சேர்ந்த கணேசன் – மல்லிகா தம்பதியினர் மகள் சத்யப்பிரியா (20). கோவை அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொலிடிக்கல் சயன்ஸ் படித்து வந்தார்.மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தவர் உறவினரின் அறிவுறுத்தலின் பேரில்செல்வபுரம் மனோன்மணி சித்த வைத்திய சாலையில் சித்த மருத்துவர் குருநாதனிடம் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சத்யப்பிரியாவுக்கு சித்த மருத்துவர் குருநாதன் தந்த மருந்துகளால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சத்ய பிரியா ஆபத்தான நிலையில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மே 1ம் தேதி சித்த வைத்தியர் குருநாதன் மீது செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும், ஒரு மாதம் ஆகியும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என சத்யப்ரியாவின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த மே31ம் தேதி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு சிசிச்சை பலனின்றி சத்யப்பிரியா உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து சித்த வைத்தியர் குருநாதனை கைது செய்ய வலியுறுத்தியும், செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோவை அரசு மருத்துவமனை முன் சத்யப்ரியாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க