• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை உடைப்பு

August 20, 2020 தண்டோரா குழு

கோவை பெரியகடை வீதி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சலீவன் வீதி பகுதியில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை உடைக்கப்பட்டது. தகவல் அறிந்த இந்து அமைப்புகள் மற்றும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த கடைவீதி காவல்துறையினர் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பேசிய விவேகானந்தர் பேரவை நிறுவன தலைவர் ஜெலேந்திரன்,

இந்து மக்கள் விழாவான விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கூடாது என்று பலரும் முயற்சித்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்கள் தான் இது போன்று செய்திருக்க கூடும், இது போன்று செயல்கள் செய்பவர்களை கைது செய்து வழக்கு கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டா உள்ள நிலையில் விநாயகர் சிலை உடைக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அதுமட்டுமின்றி அப்பகுதியில் சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இயந்திரங்கள் மோதி சிலை சேதமடைந்திருக்கலாம்
என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க