• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை உடைப்பு

August 20, 2020 தண்டோரா குழு

கோவை பெரியகடை வீதி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சலீவன் வீதி பகுதியில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை உடைக்கப்பட்டது. தகவல் அறிந்த இந்து அமைப்புகள் மற்றும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த கடைவீதி காவல்துறையினர் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பேசிய விவேகானந்தர் பேரவை நிறுவன தலைவர் ஜெலேந்திரன்,

இந்து மக்கள் விழாவான விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கூடாது என்று பலரும் முயற்சித்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்கள் தான் இது போன்று செய்திருக்க கூடும், இது போன்று செயல்கள் செய்பவர்களை கைது செய்து வழக்கு கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டா உள்ள நிலையில் விநாயகர் சிலை உடைக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அதுமட்டுமின்றி அப்பகுதியில் சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இயந்திரங்கள் மோதி சிலை சேதமடைந்திருக்கலாம்
என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க