• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீர்செய்யும் பணிகளில் கோவை மாநகராட்சி ஊழியர்கள்

April 27, 2021 தண்டோரா குழு

கோவை ஒப்பணக்காரவீதி, மில்ரோடு சந்திப்பில் கடந்த இரண்டு நாட்களுக்குமுன் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் அந்தவழியாக வந்த கனரகவாகனம் ஒன்று பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தகவல் அறிந்துவந்த மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக கனரக வாகனத்தை அப்புறப்படுத்தி சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.பாதாள சாக்கடைக்காக பதிக்கப்பட்டு இருந்த குழாய்கள் சேதமடைந்து உடைந்ததால் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு வாகனம் கவிழ்தது விபத்து நடந்தது தெரியவந்தது. அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தற்பொழுது மாநகராட்சி ஊழியர்கள் புதிய ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பகல்நேரங்களில் இந்தபகுதிகள் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் என்பதாலும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் என்பதாலும் மாநகராட்சி ஊழியர்கள் இரவுநேரத்தில் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் படிக்க