• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சான்றிதழ் பெற்ற பொற்பணியாளர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

December 27, 2021 தண்டோரா குழு

கோவையில் சான்றிதழ் பெற்ற பொற்பணியாளர்கள் சங்க தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கோவையில் சான்றிதழ் பெற்ற பொற்பணியாளர்கள் சங்க மகாசபை பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சுக்கரவார் பேட்டை பகுதியில் உள்ள கே.பி.எஸ்.வளாகத்தில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக ஆர்.கோபாலகிருஷ்ணன், செயலாளராக சுப்பையா அய்யப்பன், பொருளாளராக கணேசபிரசாத், துணை தலைவர்களாக பி.ரவி, கணகசபாபதி அண்ணாதுரை, கே.பி.எஸ். ரஜேஷ், துணை செயலாளர்களாக ராஜேஷ்குமார், ரமேஷ் சுரேஷ் லட்சுமணன், ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் கௌரவ ஆலோசகர்களாக நாகராஜ், வெங்கடாசலம், சந்தோஷ் பாலசுப்பிமணியம், கவுரி மனோகாரன் ராஜேந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆர் .கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சமுதாய மக்கள் ஒற்றுமைக்காவும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும் கடந்த 1975ம் ஆண்டு கே. பி.எஸ். அவர்களால் இந்த சங்கம் துவங்கப்பட்டதாகவும்,. இன்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள நிலையில்,, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சமூக மக்களுக்கு அரசு உதவிகள் கிடைக்க வழி வகை செய்யவும்,இந்த சங்கம் பணியாற்ற உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் தற்போது வரை 320 உறுப்பினர்கள் உள்ள நிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என அவர் தெரிவித்தார்.முன்னதாக கூட்ட நிகழ்வை ராஜேஷ் தொகுத்து வழங்கினார்.

மேலும் படிக்க