• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சரவணா செல்வரத்தினம் வணிக வளாகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

December 1, 2021 தண்டோரா குழு

கோவை ஒப்பணைக்காரர் வீதியில் உள்ள சரவணா செல்வரத்தினம் வணிக வளாகத்தில் காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வருமான வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து சென்னை, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சரவணா செல்வரத்தினம் வணிக வளாகத்தில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை ஒப்பணைக்காரர் வீதியில் உள்ள அந்நிறுவன வணிக வளாகத்தில் காலை 7 மணி முதல் 6 இனோவா கார்களில் வந்த அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வரும் வருமான வரித்துறை சோதனை காரணமாக இன்று காலை முதல் வணிக வளாகம் மூடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க