• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சம்பளம் கேட்டவற்கு பீர் பாட்டிலால் அடி – உரிமையாளர் கைது !

May 23, 2020 தண்டோரா குழு

கோவையில் சம்பள பணம் கேட்டவரை பீர் பாட்டில் கொண்டு தாக்கியவர் மற்றும் நகை கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பெரியகடை வீதி பகுதியில் வசித்து வருபவர் சசி கிருஷ்ணன்.இவர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த அப்துல் ஹக்கீம் (43) என்பவரது நகை கடையில் மூன்று நாள் பணியாற்றி உள்ளார். இதற்கான சம்பள பணத்தை ஹரிகிருஷ்ணன் கேட்டபோது எந்த பதிலும் கிடைக்கவில்லை.இதனை தொடர்ந்து அவர் வீடு திரும்பி உள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு சசி கிருஷ்ணன் வீட்டிற்கு அப்துல் ஹக்கீம் மற்றும் அவரது நண்பரான அப்துல் சலாம்(21) ஆகியோர் சென்றுள்ளனர். வேலைக்கு வரும்படி அப்துல் ஹக்கீம் கூறியுள்ளார்.தனது சம்பள பணத்தை தருமாறு கேட்டதால் ஆத்திரமடைந்த அப்துல் ஹக்கீம் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கி உள்ளார்.உடன் இருந்த அப்துல் சலாம் பீர் பாட்டில் கொண்டு தாக்கி அவரை மிரட்டி உள்ளார்.

இது குறித்து சசிகிருஷ்ணன் அளித்த புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த பெரியகடை வீதி போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க