• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கமால் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்

April 25, 2020

நாளை முதல் நான்கு நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால்கோவையில் பொதுமக்கள்சமூக இடைவெளியை கடைபிடிக்கமால் பொருட்கள் வாங்க குவிந்தனர்.

கோவையில் ஆர்எஸ் புரம் பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கு நாளை முதல் நான்கு நாட்கள் அமலுக்கு வரும் நிலையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அரசு அறிவித்த சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொருட்களை வாங்குவதற்கு நீண்ட வரிசையில் நெருக்கமாக நிற்கும் மக்களுடைய காட்சிகள் பார்க்கப்படுகிறது.

மேலும் மதியம் ஒரு மணி வரைக்கும் மட்டும் கடைகள் இருப்பதால் மக்கள் அதிகமான கூட்டம் இருப்பதாக தெரிவித்தனர். போலீசார் அறிவுறுத்திய உத்தரவுகளை மக்கள் பின்பற்றாத அவலமும் கோவையில் பல்வேறு பகுதிகளில் இது போன்று காணப்பட்டது.

மேலும் படிக்க