• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சக்திசேனா சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

October 10, 2020 தண்டோரா குழு

கோவையில் இந்து மக்கள் இயக்கத்தின் சக்திசேனா சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக இந்து மக்கள் இயக்கத்தின் சக்திசேனா சார்பாக கொங்கு மண்டல தலைவர் பொட்டு ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொது செயலாளர் புல்லட் சேகர் முன்னிலையில் நடைபெற்ற இதில் அயோத்தியில் புதிதாக அமைய உள்ள புதிய ராமர் கோவிலை தகர்த்தெறிவேன் என பகிரங்கமாக பேசிய நபரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோசங்கள் எழுப்பினர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சக்திசேனாவின் நிறுவன தலைவர் அன்புமாரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,வரும் பதினாறாம் தேதி சிறைச்சாலை முன்பாக பாட்சாவை விடுதலை செய்ய கோரி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தை தடை செய்ய வேண்டும் என காவல்துறையினரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் சக்திசேனா மக்கள் இயக்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க