• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கோழி திருடிய வாலிபர் கைது !

July 12, 2021 தண்டோரா குழு

கோவையில் கோழி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மரப்பட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் சில நாட்களாக கோழிகள் காணாமல் போய் உள்ளது. இந்நிலையில்,
நேற்று இரவு பண்ணையில் கோழிகளின் அலறல் சத்தம் கேட்டு உரிமையாளர் சுபேர் அலி சென்று பார்த்த பொழுது வாலிபர் கோழியை தூக்கி செல்வது தெரியவந்தது.

இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திருடனை பிடித்து மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விசாரணையில் மரப்பட்டை பொட்டு மேட்டை சேர்ந்தவிஷ்ணு பிரதாப் கோழியை வழக்கமாக திருடி செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கோழியை பறிமுதல் செய்துவாலிபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க