• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கோர்ட்டில் போலி ஆவணங்களை தாக்கல் செய்த இருவர் கைது

February 2, 2021 தண்டோரா குழு

கோவையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் நிதிநிறுவனம் நடத்தி வந்தார். அவர் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு அவரை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. செந்தில்குமார் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார் .அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

செந்தில்குமாருக்கு அன்னூர் அருகே உள்ள புகழூர் வலசை சேர்ந்த பழனிச்சாமி(55) மற்றும் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்த தேவி ஆகியோர் ஜாமீன் ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அவர்களது ஆவணங்களை நீதிபதிகள் சரி பார்த்தபோது அவர்கள் ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்ட தெரியவந்தது. இதனை அறிந்த நீதிபதி அவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து கோர்ட்டு உதவியாளர் தங்கமணி போலி ஆவணங்களை தாக்கல் செய்த பழனிச்சாமி, தேவி ஆகியோர் மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் பழனிச்சாமி தேவி ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து அரசிடம் பொய்யான ஆவணங்களை அளித்து ஜாமீன் பெற்றதாக வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த அனுஷ்யா தேவி என்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க