• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பேருந்து போக்குவரத்துகள் குறைப்பு

June 22, 2020 தண்டோரா குழு

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதன் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கோவிட்-19 தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கோவையிலும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக கோவையில் இயங்கி வந்த உள்ளூர் பேருந்துகளும், பொள்ளாட்சி போன்ற பகுதிகளுக்கு இயக்கிவந்த பேருந்துகளும் 20, முதல் 25 பேருந்துகள் வரை குறைக்கப்பட்டுள்ளதால் கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் அதிகமான அளவில் பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. குறிப்பாக பொள்ளாச்சி செல்லும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், பயணிகளை வரிசையில் நிறுத்தி பேருந்தில் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது,

பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள் குறைக்கப்பட்டதால் நாங்கள் இரண்டு மணிநேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டத்தை குறைக்க அரசு பொள்ளாச்சி செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் படிக்க