• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொரோனா நோயாளிகளின் உறவினர்களிடம் கோரிக்கை கேட்டறிந்த ஆட்சியர் !

June 17, 2021 தண்டோரா குழு

கொடிசியா சிறப்பு சிகிச்சை மையம், இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா சிறப்பு சிகிச்சை மையமான கொடிசியாவில் மொத்த படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் மற்றும் சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு, குடிநீர், தங்கும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேரில் பார்வையிட்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி இயந்திரங்களின் எண்ணிக்கை மற்றும் உற்பத்தி அளவு குறித்து கேட்டறிந்தார்.

மேலும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவு மற்றும் புறநோயாளிகள் பிரிவுகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அங்கிருந்த நோயாளிகளின் உறவினர்களிடம் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை உரிய நேரத்தில் வழங்கவும், ஆக்ஸிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களுக்கு கலெக்டர் ஜி.எஸ். சமீரன் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் நிர்மலா, இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரவீந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க