• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளை துவக்கி வைத்த ஆணையாளர்

July 19, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரானா தடுப்பு நடவடிக்கைகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷரவன் குமார் ஜவடேகர் IAS கொடியசைத்து துவைக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொரானா நோய் தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக வீதிகள், சாலைகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மை படுத்துவதற்க்காக 10 டிராக்டர், 2 வஜ்ரா வாகனங்கள், ஆட்டோக்களை பயன்படுத்தி கிருமி நாசினி தெளிக்கும் பணிக்கு ஈடுபடுத்தப்பட்டது.

மேலும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏர்படுத்தும் பணிக்கு 40 ஆட்டோக்களும் பயன்படுத்தப்பட்டது. இதன் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் கொடியசைத்து துவைக்கி வைத்தார்.மேலும் இந்த நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, மற்றும் தெற்கு மண்டல உதவி ஆணையாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த பணிக்காக 150 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த விழாவில் பேசிய மாநகராட்சி ஆணையாளர்,

உங்களின் பணி மேன்மை மிக்கது, தெற்க்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நோய் தொற்று அதிகமாக உள்ளதாக நான் அறிய வருகிறேன். தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பணிகளை இன்று ஒருநாளுடன் முடித்துக் கொள்ளாமல் தொடர்ந்து நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு தொற்று இல்லா மண்டலமாக கோவை தெற்கு மண்டலத்தை மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் காவல்துறையினர் மிகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து. கண்டேன்மண்ட் பகுதிகளில் யாரும் வெளிவராத வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் படிக்க