• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற வந்த இருவர் உயிரிழப்பு

July 19, 2020 தண்டோரா குழு

கோவை இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 முதியவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர்.

கோவை இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 74 வயது மூதாட்டி கடந்த 10 ஆம் தேதி கொரோனா பாதிப்பால் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இதை தொடர்ந்து இவரது உடல் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னிலையில் தகனம் செய்ய ஒப்படைக்கப்பட்டது.

அதேபோல், கோவை டவுன்ஹால் அருகே உள்ள வின்செண்ட் சாலையை சேர்ந்த 65 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதை தொடர்ந்து இவரது உடல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திடம் நல்லடக்கம் செய்ய ஓப்படைக்கப்பட்டது.இவரது உடலை அவ்வமைப்பினர் சுகாதாரத்துறை விதிகளின்படி நல்லடக்கம் செய்தனர்.

மேலும் படிக்க