• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கேஸ் சிலிண்டரை லாவகமாக திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சி

December 30, 2019

டீசல் உள்ளிட்ட பெட்ரோல் கேஸ் எரி பொருட்கள் விலை சமீபத்தில் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கின்றன. முதலில் வாகனங்களை திருடி வந்த திருடர்கள் பின் வாகனத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் திருடி வந்தனர்.

இந்த நிலையில் ஒரு படி மேலே போய் வீட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட சிலிண்டர் கேஸ்ணை திருடும் திருடர்கள் அதிகமாகி வருகின்றனர்.

கோவையில் அப்புசாமி லேஅவுட் அருகே புளியகுளம் முதல் ரேஸ்கோர்ஸ் போகும் சாலையில் இண்டன் சிலிண்டர் விநியோகஸ்தர் ஒருவர் தனது வாகனத்தில் சிலிண்டரை எடுத்துவந்து விநியோகம் செய்வதற்காக சில சிலிண்டரை வண்டியில் வைத்து விட்டு சிலவற்றை எடுத்து மாடி மேலே செல்கிறார், விநியோகஸ்தர்ஐ பின்தொடர்ந்த திருடர்கள் சற்று லாவகமாக அவர் மேலே சென்றவுடன் அந்த சிலிண்டரை திருடிச் செல்கின்றனர்.

இந்த காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. வெளியாகியுள்ள சிசிடிவி யின் அடிப்படையில் சமையல் கேஸ் விலை உயர்வை காட்டுவதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க