• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கூட்டுறவு வங்கி செயலாளரை கடத்தி 50 லட்சம் பணம் பறித்த 3 பேர் கைது

January 22, 2019 தண்டோரா குழு

நகர கூட்டுறவு வங்கி செயலாளரை கடத்தி 50 லட்சம் பணம் பறித்த கும்பலை சேர்ந்த மூன்று பேரை போலிசார் கைது செய்தனர்.

கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கியின் செயலாளராக இருந்து வருபவர் சரவணக்குமார். இவரிடம் நகையை வைத்து பணம் வாங்குவது போல் வங்கி வந்த சில மர்ம நபர்கள் வங்கியில் அதிகளவு பணம் இருப்பதை கண்டு, கடந்த 2016 ஆம் ஆண்டு காரில் கடத்தி சென்றுள்ளனர். பின் அவரை தனியான இடத்தில் வைத்தி நிர்வாணமாக வீடியோ பதிவு செய்ததாகவும், அதை வேறு பெண்ணுடன் இணைத்து இணையத்திலும் சரவணகுமார் மகனுக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டி அவரிடம் முதல் கட்டமாக 20 லட்சம் ரூபாய் பெற்ற மர்ம கும்பல் தொடர்ந்து அவரிடன் பல தவணையாக மொத்தம் 50 லட்சம் பணத்தை பெற்றுள்ளனர்.

வீடியோவை வெளியிட்டு விடுவோம் என மிரட்டியதால் புகார் அளிக்காமல் இருந்த சரவணகுமாரை கடந்த 18 தேதி தொடர்பு கொண்டு மீண்டும் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் சரவணகுமார் சாய்பாபா காலணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கொள்ளையர்களை பணம் வாங்க அழைப்பது போல் அழைத்து கொள்ளை கும்பலை சேர்ந்த பத்மநாபன், நாகராஜன், விஷ்னுகுமார் மூன்று பேரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள கார்த்திகேயன், ஐயப்பனை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க