• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் குதிரையில் வந்து நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்

March 26, 2019 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவர் இன்று குதிரையில் வந்து நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

கோவையை அடுத்த சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த நூர் முகமது என்பவர் சுயேச்சை வேட்பாளராக கோவை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது குதிரையின் மீது அமர்ந்து ஆட்சியர் அலுவலகம் வரை வந்து நூதன முறையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

ஏற்கனவே கடந்த வாரம் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடுவதற்காக தள்ளுவண்டியில் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதன் மூலம் இரண்டு தொகுதிகளில், போட்டியிடுவதற்கு வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளார். இதுவரை பல்வேறு தேர்தலில் 30 ஆவது முறையாக வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க