December 30, 2019
கோவையில் குடியுரிமை சட்ட திருதத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாஜகவினர் தங்கள் வீட்டின் முன் கோலம் போட்டு வருகின்றனர்.
குடியுரிமை சட்ட திருத்திற்க்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் கோலம் போட்டு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோவை இடையர்பாளையம் பகுதியில் பா.ஜ.கவினர் தங்கள் வீட்டின் முன் கோலம் போட்டு வருகின்றனர்.
சி.ஏ.ஏ பற்றி தவறான வதந்திகளை பரப்புவதாகவும் இதற்கு ஆதரவாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த கோலம் போட்டு வருவதாக பா.ஜ.கவினர் கூறுகின்றனர்.