• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் குடியரசு தினத்தை முன்னிட்டு குழந்தைகள் மற்றும் மகளிர்களுக்கென பிரத்யேக கண்காட்சி

January 25, 2019 தண்டோரா குழு

70 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவை புரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பிரத்யேக கண்காட்சி நடைபெற்றது. கோவையின் பெற்றோர்கள், மற்றும் வானவில் மேலே அமைப்பு சார்பாக இக்கண்காட்சியை ஐ ரீட் மொழி பள்ளியின் நிறுவனர் பிஜித்ரா ஜெகதீஷ்குமார் துவக்கி வைத்தனர்.

இன்று துவங்கி இரண்டு நாட்கள் நடைபெறும். இக்கண்காட்சியில் குழந்தைகளுக்கென ஓவிய போட்டிகள்,தியான போட்டிகள் மற்றும் ரோபோட்டிக்ஸ் முறை குறித்த விளக்கங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக இன்றைய நவீன காலத்தில் குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் கவனிக்கப்பட வேண்டியவை எனும் தலைப்பில் பெண்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்கள் குறிப்பாக பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பது குறித்த பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

மேலும் இந்த கண்காட்சியில் குழந்தைகளுக்கான ஆயத்த ஆடைகள் , குர்திஸ் , சேலைகள் , பேஷன் வகைகள் , உள் அலங்கார பொருட்கள் , கல்விக்கான பொம்மை கள் என பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும் படிக்க