• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 292 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து

June 12, 2017 தண்டோரா குழு

கோவையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 292 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய சம்மந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு காவல்துறை ஆணையாளர் பரிந்துரைள்ளார்.

கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவு படி போக்குவரத்து துணை ஆணையர் துரை தலைமையில் உதவி ஆணையர், போக்குவரத்து கிழக்கு மற்றும் மேற்கு போக்குவரத்து ஆய்வாளர்கள் மேற்பார்வையில்கடந்த வாரம் வெள்ளி, சனி மற்றும் ஆகிய 3 நாட்களில் கோவை மாநகரின் முக்கிய சந்திப்புகள் மற்றும் விபத்து நடைபெறும் இடங்களில் போக்குவரத்து காவலர்கள வாகன தணிக்கையில் ஈடுட்டனர்.

அப்போது, குடிபோதையில் வாகனம் ஓட்டிதாக 292 மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து, குடிபோதையில் வாகனங்களை ஒட்டிய வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்யக் கோரி சம்பந்தபட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு காவல்துறை ஆணையாளர் பரிந்துரைள்ளார்.

மேலும் படிக்க