• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குடிநீர் வராததால் ஊரடங்கையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

April 22, 2020 தண்டோரா குழு

குடிநீர் வராததால் ஊரடங்கையும் மீறி சமூக இடைவெளிவிட்டு காத்திருப்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தடாகம் சாலை எம்ஜிஆர் காலனி பகுதியில் கடந்த 21 நாட்களாக குடிநீர் வராததால் பொதுமக்கள் அனைவரும் காலி குடங்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்பொழுது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூட கூடாது என்று அரசு அறிவித்த நிலையில் மக்கள் அனைவரும் ஒரு மீட்டர் இடைவெளியில் சமூக இடைவெளிவிட்டு காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின் தகவலறிந்து வந்த துடியலூர் காவல் துறையினர் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்து தரப்படும் என்று உறுதி அளித்து அதன்பின் குடிநீர் திறந்து விடப்பட்டது. மேலும் வாரம் ஒரு முறை கண்டிப்பாக குடிநீர் வழங்கப்படும் என்று உறுதி அளித்ததன் பின்பு போராட்டத்தில் ஈட்டுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் படிக்க