• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கிருஸ்துவ ஆலய ஜன்னல் கண்ணாடி உடைப்பு – போலீசார் விசாரணை

February 16, 2018 தண்டோரா குழு

கோவையை அடுத்த இடையர்பாளையம் பகுதியில் உள்ள கிறிஸ்துவ ஆலய ஜன்னல் கண்ணாடிகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது.

கோவை இடையார்பாளையம் அருகிலுள்ள சிவாஜி காலனி சிம்சன் நகர் பகுதியில் சி.எஸ்.ஐ தூய மீட்பர் ஆலயம் உள்ளது.இந்த ஆலயத்தில் தினந்தோறும் ஜெப கூட்டங்கள், ஆராதனைகள், உபவாச கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆலயத்தில் ஊழியராக வேலை பார்க்கும் பிரபாகரன் வழக்கும்போல் நேற்று(பிப் 15) இரவு 9 மணியளவில் ஆலய பணிகளை முடித்து கொண்டு பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை 7.30மணியளவில் ஆலயத்தை தூய்மைபடுத்த பிரபாகரன் திரும்பி வந்து பார்த்தபோது, லயத்தின் முன்பக்க ஜன்னல் இரும்பு பைப்பால் உடைக்கப்பட்டு கிடந்தது. இந்த ஜன்னல் 6 அடி நீளம் மற்றும் 4 அடி அகலம் உள்ள 10 எம்.எம் அளவு கொண்டதாகும்.

இதனை பார்த்த பிரபாகரன் திருச்சபை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடைந்த ஜன்னல்கள் மற்றும் இரும்பு பைப்பை எடுத்து கொண்டு சென்றனர். மேலும்,இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க