• Download mobile app
16 Jul 2025, WednesdayEdition - 3444
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவையில் கிருஸ்துமஸ் கொண்டாட்டம் !

December 25, 2018 தண்டோரா குழு

கோவையில் உற்சாகத்துடன் கிறுஸ்துவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறுஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கிறுஸ்து பிறப்பு தினமான இன்று உலகம் முழுவதும் கிறுஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள தேவாலயங்களில்சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. கோவை காட்டூர் பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது.

வண்ண வண்ண உடைகளில் கிறுஸ்து பிறப்பின் பெருமைகளை சொல்லும் வகையில் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு குழந்தை ஏசுவை தொட்டிலில் கிடத்தும் நிகழ்ச்சி போன்றவற்றை நடைபெற்றது. இதை தொடர்ந்து அங்கு குழுமியிருந்த கிறுஸ்துவர்கள் உலக அமைதி மற்றும் சமாதானம் வேண்டி சிறப்பு ஆராதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து புத்தாடை அணிந்து வந்திருந்த கிறுஸ்துவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு உற்சாகத்துடன் கொண்டாடினர்.

மேலும் படிக்க