• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் காவலர்களுக்கு 60 குண்டுகள் முழங்க வீரவணக்கமும், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

October 21, 2021 தண்டோரா குழு

கோவை அவினாசி ரோட்டில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் இந்தியா முழுவதும் பணியின்போது வீரமரணம் அடைந்த 377 காவலர்களுக்கு 60 குண்டுகள் முழங்க வீரவணக்கமும், அஞ்சலிசெலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பணியில் இருக்கும்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு வீரவணக்கம், மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியானது நாடுமுழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று காலை கோவை போலிஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள வீரமரணம் அடைந்த காவலர்கள் நினைவு தூணிற்கு மலர் வலையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

குறிப்பாக கடந்த ஆண்டு 01-09-2020 முதல் 31-08-2021 வரை இந்தியா முழுவதும் பணியின்போது வீரமரணம் அடைந்த 377 காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வீரவணக்கமும், அஞ்சலியும், செலுத்தப்பட்டது.

இதில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர், மாநகர காவல் ஆணையாளர் தீபக் எம் தமோதர்,கோவை சரக டிஐஜி முத்துச்சாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், உட்பட காவல் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு நினைவுதூண் அருகே வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அரசு முறைப்படி 60 குண்டுகள் முழங்க மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

அதனை தொடர்ந்து 30 காவல்துறையினர் கலந்துகொண்டு இசை வாத்தியங்களை இசைத்து அணிவகுப்பு மரியாதை செலுத்தினார்கள்.

மேலும் படிக்க